#Breaking|| தீபாவளி நெருங்கி வரும் இந்த நேரத்தில் இந்தியா முழுமைக்கும் உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

காற்று, ஒலி மாசுவை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்---] உச்ச நீதிமன்றம் அதிரடி

காற்று, ஒலி மாசுவை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக தெரிவித்து அவற்றுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு போலியான பசுமை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரியும் அர்ஜுன் கோபால் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை தளர்த்தவும், பேரியம், சர வெடிகளை கொண்டு பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது

இது தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, எம் எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி விசாரித்தது.

இந்த மனுக்கள் மீது கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, டெல்லியில் சட்டவிரோத பட்டாசு விற்பனை கண்காணிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது ,பட்டாசு விற்பவர்கள் , வெடிப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பட்டாசுகளுக்கு டெல்லி வலையப் பகுதிகளில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு தடை விதித்த பிறகு, பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசு விற்பனைக்கான உரிமங்கள் 2016-ஆம் ஆண்டு தொடங்கியே தற்காலிகமாகவே வழங்கப்பட்டு வருகின்றன என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தீர்வாகாது ,சட்டவிரோத பட்டாசுக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுதான் உரிய தீர்வாக இருக்க முடியும். பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் மாநில அரசு தடை விதிக்கும் பட்சத்தில், அது முழுமையான தடையாக கொள்ள வேண்டும். எவ்வித தற்காலிக உரிமத்தையும் டெல்லி போலீஸ் வழங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டாசு விற்பனைக்கு உரிமம் வழங்கினால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாகிவிடும் என குறிப்பிட்டனர்.

இதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழப்புகள் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ,காற்று மாசுபாடு தலைநகருக்கு மட்டுமானது மட்டுமல்ல, நாட்டின் பிரச்னையாகவும் உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் ஆயுள்காலம் 12 ஆண்டுகள் குறைவதாக அண்மைகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ல்லியில் பட்டாசுக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டாலும் , தடையை மீறி சட்டவிரோதமாக பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு வெடிக்கப்படுகின்றன,. இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. பட்டாசு வெடிப்பதற்கு முழுமையான தடையை விதிக்க வேண்டும் என கோரவில்லை. பேரியம் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளை தடை விதிக்க வேண்டும் எங்களின் கோரிக்கை என வாதிட்டார்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், பட்டாசு தொடர்பான முழுமையான ஆய்வுகள் முன்பு இல்லை, இதனால், பேரியம் பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தற்காலிகமாக தடை விதித்தது, ஆனால் தற்போது விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு புதிய ஃபார்முலா கொண்டுவரப்பட்டுள்ளது, தற்போது ஆய்வுகளின் படி ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை பேரியம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன , உலகில் எந்தவொரு நாட்டிலும் பட்டாசு உற்பத்தியில் பேரியத்திற்கு தடை விதிக்கப்படவில்லை சிஐஎஸ்ஆர், நீரி போன்ற மத்திய அரசின் அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ள ஃபார்முலாவைக் கொண்டே பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசு தயாரிப்புக்கு பேரியம் நைட்ரேட் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இடையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

இந்நிலையில் இந்த மனுக்கள் தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று பிறப்பித்தது. அதில், மேம்படுத்தப்பட்ட ஃபார்முலாவை கொண்ட பேரியம், சரவெடிகளைக் கொண்டு பட்டாசுகளை தயாரிக்க அனுமதிக்க கோரிய பட்டாசு உற்பத்தியாளர்களின் மனுக்கள் தற்போதைக்கு நிராகரிக்கப்படுகின்றன. மீதமுள்ள மனுக்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. பசுமை பட்டாசு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 2018 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தலையிடவில்லை. அவற்றை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்