கெஜ்ரிவாலுக்கு இடியை இறக்கிய ஐகோர்ட்... உச்சநீதிமன்றம் எடுக்க போகும் முடிவு

x

கெஜ்ரிவாலுக்கு இடியை இறக்கிய ஐகோர்ட்... உச்சநீதிமன்றம் எடுக்க போகும் முடிவு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை, டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினுக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனு மீதான விசாரணை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில், கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, கெஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்றே அவசரமாக விசாரிக்க கோரி முறையிடவும், அவரது வழக்குரைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்