ஆம்ஸ்ட்ராங் கொலையின் கடைசி முடிச்சு... ஆந்திராவில் அலறி ஓடிய மெயின் ரவுடி

x

ஆம்ஸ்ட்ராங் கொலையின் கடைசி முடிச்சு

ஆந்திராவில் அலறி ஓடிய மெயின் ரவுடி

நொடியில் மரண பயத்தை காட்டிய TN போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங் ராஜா காரில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் நண்பரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவிற்கும் தொடர்பு இருப்பதாக பாஜகவின் முன்னாள் நிர்வாகி அஞ்சலை வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, மூன்று தனிப்படைகள் அமைத்து சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.குறிப்பாக ஆந்திராவில் உள்ள இரண்டாவது மனைவி வீட்டில் ராஜா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்த தகவல் அறிந்து முன்னரே காரில் அவர் தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. காரின் பதிவு எண்ணை வைத்து தற்போது போலீசார் அவரை தேடி வரும் நிலையில்,

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடிகளான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை கைது செய்த பின்னர் தான் கொலைக்கான முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்