ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமனிடம், போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

x

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுவரை 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவரான அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ள தனிப்படை போலீசார், தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல கோடி புரளக்கூடிய ஸ்கிராப் பிசினஸை எந்த ரவுடி கைக்குள் வைத்திருந்தார், அதில் ஆம்ஸ்ட்ராங் நுழைந்தது எப்படி என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் கைமாற்றி விடுவதில் ஆம்ஸ்ட்ராங் உடன் ஏற்பட்ட பிரச்சனை, பல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் தலையீடு என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அஸ்வத்தாமனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தும் போலீசார், அவரது வாக்குமூலத்தை வீடியோவாகவும் பதிவுசெய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்