"ஆம்ஸ்ட்ராங் மட்டும் அல்ல இன்னோரு பெரும் தலைக்கும் குறி" - சென்னையை அதிரவைத்த அதிர்ச்சி வாக்குமூலம்

x

"ஆம்ஸ்ட்ராங் மட்டும் அல்ல இன்னோரு பெரும் தலைக்கும் குறி" - சென்னையை அதிரவைத்த அதிர்ச்சி வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங்கிற்குப் பயந்து பதுங்கி வாழ்ந்து வந்ததாக மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது

தமிழக பகுஜன் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐந்தாயிரம் பக்கம் உள்ள குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். இதில் சில பக்கங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் பொன்னை பாலு, ரவுடி ஜெயபாலுவையும் ஆம்ஸ்ட்ராங்கையும் ஒரே நேரத்தில் கொலை செய்ய முடிவு செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இருவரையும் கொலை செய்வதற்காக வாடைக்கு வீடு எடுத்து ஆயுதங்களைப் பதுக்கி வைத்தாகவும், தனது அண்ணன்

ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பின்னர் தன்னையும் ஆம்ஸ்ட்ராங் கொன்று விடுவார் என்று பயந்து பதுங்கி வாழ்ந்து வந்ததாகவும் பொன்னை பாலு வாக்குமூலாக அளித்தது குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்