ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மூலை முடுக்கெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிவிக்க, போலீசார் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கு ஒன்றில், கடந்த மாதம் 20ஆம் தேதி தேடப்படும் குற்றவாளியாக சீசிங் ராஜாவை நீதிமன்றம் அறிவித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன், தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில், புறநகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் சேலையூர் காவல் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்