உடைக்கப்பட்ட 11 போன்கள்.. 4 வில்லன்கள்.. திடீர் வேகமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, உடைக்கப்பட்ட 11 செல்போன்களில் உள்ள விவரங்களை திரட்டும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன், பொன்னை பாலு, அருள், ராமு ஆகிய 4 பேரை காவலில் எடுத்து புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வைத்து தனிப்படையினர் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். கொலைக்கான முக்கிய காரணம் என்ன? எவ்வளவு பணம் கைமாறியது? கோடாரி போன்ற கத்தியை மறைத்து வைத்திருப்பது எங்கே? செல்போன்களை உடைத்த‌தற்கான காரணம் என்ன? என்று கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தடயங்களை சேகரிக்க அழைத்து சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடைக்கப்பட்ட 11 செல்போன்களில் உள்ள விவரங்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். யார் யாரை தொடர்பு கொண்டனர் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்