போலீசாரை திடுக்கிட வைத்த வாக்குமூலம்.. பின்னணியில் பிரபல பள்ளி தாளாளர்

x

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இளைஞருக்கும் கடிதத்துக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. மேலும், தன் பெயரில் ஏற்கனவே ஒரு மிரட்டல் கடிதம் காவல்துறைக்கு அனுப்ப பட்டிருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனையடுத்து இளைஞரின் பின்னணியை விசாரித்த போலீசார், அவர் தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநர் என்பதை கண்டுபிடித்தனர். அந்த பள்ளியின் தாளாளர் அருண் ராஜ், ஏற்கனவே மிரட்டல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்று வந்திருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அருண்ராஜை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்