80 வயது பாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்... மடக்கி பிடித்து வெளுத்தெடுத்த ஊர்மக்கள்

x

அரியலுர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியின் 8 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜெயங்கொண்டம் மேல வெள்ளாளர் தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி சீதாலட்சுமியிடம், திருப்பூர் மாவட்டம் பெருந்தெளவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வ விநாயகம் என்ற 24 வயது இளைஞர் அத்துமீறி இருக்கிறார். உடனே, இளைஞரை அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்