"பலி வாங்க காத்திருக்கும் அபாய கிணறு"- தயவுசெஞ்சு மூடுங்க இதை..! - அரியலூர் அருகே பரபரப்பு

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முறையாக பராமரிக்கப்படாத கிணற்றால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. முத்துச்சேர்வாமடம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இல்லாததால், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிணறு குப்பைகள் மண்டி கிடக்கிறது. மதில்சுவர் இல்லாமல் காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்வோர் தவறி விழும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் அங்கு விளையாடுவதால் உடனடியாக கிணற்றை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்