கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்..கொத்தனாரை கொலை செய்த கொடூரம்...கடன் கொடுத்தது தப்பாடா..!

x

மயிலாடுதுறையில், 5 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கொத்தனாரை கொலை செய்த

நபரை போலீசார் கைது செய்தனர். சீர்காழியில் கடந்த 30 ம் தேதி சாலையோரம் முருகன் என்பவர் படுகாயத்துடன் உயிரிழந்து கிடந்து உள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார்

பணப்பறிப்பு வழக்கில் ராஜகோபால் என்பவரை கைது செய்து

விசாரணை நடத்தினர். அப்போது, முருகனை கொலை செய்தது ராஜகோபால் தான் என தெரியவந்தது. மேலும்

முருகனிடம் கடனாக பெற்ற ஐந்தாயிரம் ரூபாயை, அவர் திருப்பி கேட்ட போது ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.இதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்