வெஜிட்டேரியன் வில்லேஜில் தெரித்த ரத்தம் -திருவேங்கடம் என்கவுன்ட்டர் - வெளியான திடுக்கிடும் தகவல்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ரவுடி திருவேங்கடத்தை, சென்னை புழல் வெஜிட்டேரியன் வில்லேஜ் பகுதியில் வைத்து போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். விசாரணையில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து திருவேங்கடம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பந்தப்பட்ட இடத்திற்கு திருவேங்கடத்தை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம், சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே தகர கொட்டகைக்குள் பதுங்கி இருந்தததாகவும், அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்காப்புக்காக திருவேங்கடத்தை என்கவுன்ட்டரில் சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது, போலீசாரை ஆபாசமாக பேசி தாக்க முயன்றது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை புழல் காவல்நிலையத்தில் திருவேங்கடத்தின் மீது போலீசார் வழக்குபதிவு செய்திருந்த நிலையில், தற்போது போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றது உட்பட மாதவரம் போலீசார் மேலும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்