சென்னை போலீசுக்கு நன்றி சொன்ன அமெரிக்க தூதர்

x

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, சென்னை காவல்துறை ஆணையர் அருண் மற்றும் அமெரிக்க துணை தூதரகத்தை பாதுகாத்து வந்த அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். காவல்துறை அதிகாரிகள் சிறப்பான முறையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளார். தூதரகத்தில் அமெரிக்க சுதந்திர தின நிகழ்ச்சிகளை பாதுகாப்புடன் நடத்த உதவியதாகவும், இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் செழிக்கும் வகையிலும் சென்னை காவல் துறை செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்