சென்னையில் விளையாடி கொண்டிருந்த பிஞ்சை கடித்து குதறிய தெரு நாய்.. அடையாளம் தெரியாத சோகம்

x

சென்னை அம்பத்தூர் அருகே தெரு நாய் கடித்து குதறிய பெண் குழந்தைக்கு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர் அருகே பீமா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கபாண்டி, பிரதீபா தம்பதியர்.

அவர்களின் இரண்டரை வயது மகள் யாஷிகா வீட்டில் வெளியே விளையாடி கொண்டிருந்த போது தெரு நாய் கடித்து குதறியுள்ளது. கன்னத்தில் பலத்த காயமடைந்த அக்குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூர் ஏழாவது

மண்டலத்தில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடிக்க மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்