அதிமுக முன்னாள் MLAவின் கணவர் கைது

x

சிலுவம்பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண், வேலுச்சாமி ஆகியோர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ததில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், சார்பதிவாளர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மேலும் தங்களது கைரேகை இல்லாமல், பெயரை மட்டும் பயன்படுத்தி மோசடியாக 50-க்கும் மேற்பட்ட போலி ஆவணங்களை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி, ஆள்மாறாட்டத்திற்கு உடந்தையாக செயல்பட்ட அனுராதா, சந்திரசேகரன், நந்தகுமார், பழனிசாமி, ஆவண எழுத்தர் ரவிக்குமார், முருகேசன், ரவிச்சந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பென்னுசாமியை, போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பூரில் வைத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்