ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் - அதிமுக Ex MLA மீது சரமாரி தாக்குதல்

x

தூத்துக்குடியில், ஓடையில் தனியார் நிறுவனம் காற்றாலை அமைப்பதை தட்டிக்கேட்ட விவகாரத்தில், ஓட்டப்பிடாரம் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பெரியகுளத்தில் ஓடையை ஆக்கிரமித்து, தனியார் காற்றாலை நிறுவனத்தினர், காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜனை காற்றாலை நிறுவன ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுந்தர்ராஜன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்