கோவில் சென்று வீடு திரும்புவதற்குள் துடிதுடித்து நின்ற உயிர் -வெளியான அதிர்ச்சி தகவல்

x

உளுந்தூர்பேட்டை அருகே, சாலையோர மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர்,

திருச்செந்தூருக்கு வேன் மூலம் கோயில் சுற்றுலா சென்று விட்டு உளுந்தூர்பேட்டை வழியாக சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மேட்டத்தூர் என்ற இடத்தில், கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் , சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்