ஆயுதபூஜை எதிரொலி..எகிறி அடித்த பூக்களின் விலை..1கிலோ மட்டும் இவ்வளாவா..? | Aayudha Poojai

x

திண்டுக்கல் அண்ணா பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கனகாம்பரம் ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை பூ 600 ரூபாய்க்கும் விற்பனையானது.

சேலம் ஓமலூர் அருகே பூசாரிப்பட்டி பூ சந்தையில், குண்டுமல்லியின் விலை இரு மடங்கு உயர்ந்து கிலோ 800 ரூபாய்க்கு விற்பனையானது.

ஈரோடு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், மல்லிகை பூ கிலோ 1,200 ரூபாய்க்கும், முல்லை 700 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாய்க்கும் விற்பனையானது.

அதேநேரம், நீலகிரி மாவட்டம் கூடலூரில், சாலையோர கடைகளில் பொறி மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்த போது மழை பெய்ததால், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்