கை குழந்தையுடன் காத்திருந்த பெண்... நிற்காமல் சென்ற அரசு பேருந்துகள்..! அடுத்து நடந்த விபரீதம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

x

சிதம்பரம் அருகே, கைகுழந்தையுடன் பேருந்தில் ஏற முயன்ற பெண், தடுமாறி கீழே விழுந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாத்தியாபள்ளி பகுதியில் இருந்து கடலூர் சென்ற அரசு பேருந்து, பரங்கிப்பேட்டை பெரிய தெரு முனை நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. அப்போது, அந்த பேருந்துக்காக கைகுழந்தையுடன் நின்றிருந்த பெண்மணி ஓடிச் சென்று ஏற முயன்றபோது கால் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் காயம் அடைந்த குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்