ஊருக்குள் இறங்கிய காட்டு யானை.. முதியவருக்கு நேர்ந்த கொடூரம்..சோகத்தில் மூழ்கிய மக்கள்

x

ஊருக்குள் இறங்கிய காட்டு யானை.. முதியவருக்கு நேர்ந்த கொடூரம்..சோகத்தில் மூழ்கிய மக்கள்

#elephant #coimbatore #thanthitv

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் காட்டு யானை ஒன்று உலாவியுள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர், அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேரூர் -சிறுவாணி சாலையை கடந்த அந்த காட்டு யானை, 65 வயதான மருதமுத்து என்பவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர், வனத்துறை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே அந்த ஒற்றை காட்டு யானை, பேரூர் பச்சாபாளையம் அருகே உள்ள ஆவின் பால் பண்ணை பகுதியில் பதுங்கியுள்ளது. தொடர்ந்து அதனை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்