சென்னையில் சாலையில் உருவான திடீர் பள்ளம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்

x

சென்னை காசிமேட்டில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம், 2 மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டது. காசிமேட்டில் இருந்து எண்ணூர் செல்லும் சூரிய நாராயணன் சாலையில் திடீரென்று சுமார் 5 அடி ஆழத்துக்கும் அதிகமான பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காசிமேடு போக்குவரத்து போலீசார், சாலையில் தடுப்புகளை வைத்து, வாகனங்களை மெதுவாக செல்லும்படி அனுப்பி வந்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திர மூலமாக அந்த பள்ளத்தை செங்கல், ஜல்லி கலவைகளை வைத்து பள்ளத்தை மூடினார்கள். சுமார் 2 மணி நேரத்துகுப் பிறகு பள்ளம் சீரமைக்கப்பட்டு, வாகனங்கள் சீராக அந்த வழியாக செல்கின்றன


Next Story

மேலும் செய்திகள்