ஒற்றை ஆளாக போராடிய ஊராட்சி மன்ற தலைவி மீது வழக்கு பதிவு

x

ஒற்றை ஆளாக போராடிய ஊராட்சி மன்ற தலைவி மீது வழக்கு பதிவு

#villupuram #tnpolice #thanthitv

விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சங்கீதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடி இருளர் இன வகுப்பை சேர்ந்த சங்கீதாவை ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா அவரது கணவர் குணசேகர் மற்றும் 2வது வார்டு உறுப்பினர் சுதா ஆகிய மூவரும் சாதி பெயரை சொல்லி மிரட்டி பணிகளை செய்ய விடாமல் அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா நியாயம்

கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார். அவரது மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா கேட்டு கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்