இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (13-08-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கையெழுத்திடமாட்டேன் என ஆளுநர் கூறுவது, வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... செய்தியாளர்கள் சதிஷ்முருகன், மீரான் வழங்கிய தகவல்கள் இவை...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை, கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். நான்கு முறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைத் தகவல்களுடன் இணைகிறார்கள் செய்தியாளர் பிரசாத்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தாக்கப்பட்டது உண்மை தான் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார். அதேசமயம், ஈ.பி.எஸ். சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக, திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மாமல்லபுரத்தில் களைகட்டிய பட்டம் விடும் திருவிழா...


Next Story

மேலும் செய்திகள்