கடலுக்கு கீழே.. 50 அடி ஆழத்தில்.. ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைமிகு தருணம் | Independence Day

x

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை நீலாங்கரை அருகே கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் சென்று, சுமார் 50 அடி ஆழத்தில் கொடி அசைத்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆழ்கடல் நீருக்கடியில் திருமணங்களை நடத்தி வைக்கும் அரவிந்த் என்பவர் இந்நிகழ்ச்சியை நடத்தினார். குப்பைகளற்ற கடலாக பராமரித்து, மீன்வளம் பெருகவும், பவளப் பாறைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்