நடைப்பயிற்சி மேற்கொண்ட கர்ப்பிணியிடம் செயின்பறிப்பு : தப்பியோட முயன்றவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்..!

புதுச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கர்ப்பிணியிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்...
நடைப்பயிற்சி மேற்கொண்ட கர்ப்பிணியிடம் செயின்பறிப்பு : தப்பியோட முயன்றவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்..!
x
நடைப்பயிற்சி மேற்கொண்ட கர்ப்பிணியிடம் செயின்பறிப்பு : தப்பியோட முயன்றவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்..!

புதுச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கர்ப்பிணியிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புதுச்சேரி, உருளையான்பேட்டையைச் சேர்ந்தவர் அபி. நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபி, கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதனையடுத்து, அபி கூச்சலிடவை இளைஞரை துரத்தி பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கைதான ஆந்திர இளைஞர் மதுபோதையில் இருந்ததால் விசாரணை தாமதமாவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்