"எங்கு விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் அங்கு தமிழக வீரர்கள் வெற்றி பெற வேண்டும்" - நடிகர் ஆர்யா பேட்டி

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம், இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில் பிலிப் கேப்பிட்டல் - 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
x
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம், இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில் பிலிப் கேப்பிட்டல் - 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தேசிய அளவில் முதலிடத்தை தமிழ்நாடும், 2ம் இடத்தை கர்நாடகாவும், 3ம் இடத்தை ஹரியானாவும் பிடித்தன. சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ரஞ்சினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்யா, ஒவ்வொரு முறையும் எங்கெல்லாம் விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் அங்கெல்லாம் பங்கேற்று தமிழக வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்