"100 ரூபாயில் கொரோனாவை விரட்டலாம்..." - சென்னை ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிடத்தக்க நேர்மறை நகர்வாக 100 ரூபாய் விலைகொண்ட மாத்திரையால் கொரோனாவை குணப்படுத்தலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
x
"100 ரூபாயில் கொரோனாவை விரட்டலாம்..." - சென்னை ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு

2019 ஆம் ஆண்டு சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரையில் உலகை ஆட்டிபடைத்துக்கொண்டிருக்கிறது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும், உருமாறும் வைரசுக்கு முன்னால் அவைகளில் செயல்திறன் கேள்விக்கு உள்ளாகிறது.

மறுபுறம் வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகளை கண்டறிய ஆய்வுகள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிடத்தக்க நேர்மறை நகர்வாக 100 ரூபாய் விலைகொண்ட மாத்திரையால் கொரோனாவை குணப்படுத்தலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1960-களில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் இன்டோமெத்தசின் மாத்திரையை கொரோனா நோயாளிகள் உட்கொள்ளும்போது நோயிலிருந்து வேகமாக குணமடைகிறார்கள் என கண்டுபிடித்திருப்பதாக ஐ.ஐ.டி. பேராசிரியர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்