நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 231 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் எனவும் இதன் மூலம், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து14 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்..
13 ஆயிரத்து 433 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 187 கோடியே 7 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்