ஆங்கிலேயர்களுக்கு சவரம் செய்வதில்லை என சபதம் எடுத்தவர் நாவிதர் வேதாரண்யம் வைரப்பன்!

உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக வேதரத்தினம் பிள்ளை கொடூரமாக கைது செய்யப்பட்டதைப் பார்த்து...
x
ஆங்கிலேயர்களுக்கு சவரம் செய்வதில்லை என சபதம் எடுத்தவர் நாவிதர் வேதாரண்யம் வைரப்பன்!

உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக வேதரத்தினம் பிள்ளை கொடூரமாக கைது செய்யப்பட்டதைப் பார்த்து, இனி ஆங்கில அரசு அதிகாரிகள் யாருக்கும் சவரம் செய்வதில்லை என சபதம் செய்த நாவிதர்தான் வேதாரண்யம் வைரப்பன். ஒரு போலீஸ்காரர் சாதாரண உடையில் வைரப்பனிடம் சவரம் செய்ய வந்தார். பாதி சவரம் செய்த போது உண்மை தெரிந்ததால் மீதி சவரம் செய்ய முடியாது என மறுத்தார் வைரப்பன். நீதி மன்றத்துக்கே கொண்டு போய் நிறுத்திய போது கூட, மீதி சவரத்தை வேண்டுமானால் நீங்களே செய்யுங்கள் என நீதிபதியை அவமானப்படுத்தி சிறை தண்டனையை ஏற்றார் வைரப்பன். ஆங்கிலேயரின் சட்டத்துக்கு இவரால் தர முடிந்த பதிலடி இது.

Next Story

மேலும் செய்திகள்