"காவல்துறைக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்"

பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் தவிர்த்து, ஊருக்கு வெளியே துப்பாக்கிச் சூடும் பயிற்சி மையங்களை வைக்க வேண்டும் என நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
x
பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் தவிர்த்து, ஊருக்கு வெளியே துப்பாக்கிச் சூடும் பயிற்சி மையங்களை வைக்க வேண்டும் என நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் விஜய் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், புதுக்கோட்டை சிறுவன் குண்டடி பட்டது போன்ற சம்பவங்களை தவிர்க்க, காவல்துறையினர் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். புதுக்கோட்டை சம்பவம் நடைபெற்ற உடனேயே அந்த பயிற்சி மையம் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் துப்பாக்கி பயிற்சி மையங்கள் இருப்பதைத் தவிர்த்து, ஊருக்கு வெளியே பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், கணினி வழியில் stimulator தொழில்நுட்பத்தில் துப்பாக்கிப் பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்