சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - குற்றவாளிகளை பிடிக்க மே.வங்கம் விரைந்த போலீசார்

சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்குவங்க மாணவியை, அதே துறையில் படித்து வந்த மாணவர்கள் மற்றும் கோ கைடுகள், பேராசிரியர்கள் என 8 பேர், தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளனர்.
x
சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்குவங்க மாணவியை, அதே துறையில் படித்து வந்த மாணவர்கள் மற்றும் கோ கைடுகள், பேராசிரியர்கள் என 8 பேர், தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், 10 மாதங்களுக்கு மேலாக போலீசார் வழக்கை கிடப்பில் போட்டதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் தற்போது சூடுபிடித்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பிடிப்பதற்காக மயிலாப்பூர் தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்