பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார்!

பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
x
நடிகர் பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பெண்கள் பலர் குறித்து அவதூறான கருத்துகளை இணையத்தில் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. எனவே இதுபோல் பேசும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு முன்பாக இணையத்தில் அவதூறாக பேசியதாக 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது பயில்வான் ரங்கநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்