ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
x
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளை அடக்கும் போது  கொம்புகள் குத்தி காயம் அடைந்து, உயிரிழக்கும் சம்பவம் நிகழ்கிறது. இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து மத்திய அரசின் கால்நடை நலவாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் மிட்டல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, காளைகளின் கொம்புகள் குத்தி வீரர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு, கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் என, மிட்டல் உத்தரவிட்டுள்ளார். மேலும், இனி வரும் காலங்களில் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்