"மேகதாது - வேகம் காட்டும் கர்நாடக அரசு... மவுனம் காக்கும் தமிழக அரசு..." - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மேகதாதுவில், புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
x
மேகதாதுவில், புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரை சந்தித்து, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக்குழு கோரிக்கை வைக்க உள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து எதிப்பு தெரிவிக்காமல், திமுக அரசு வாய் மூடி மவுனமாக இருப்பதாக சாடியுள்ளார். மேகதாது அணை பிரச்சினையில், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை இந்த அரசு முறைப்படி நடித்தி, கர்நாடக மாநில அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்