இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு ! டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு ..!

இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலை சமூக வலைதளங்களில் 'மீ டு' புகார் தெரிவித்திருந்தார்.
x
இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலை சமூக வலைதளங்களில் 'மீ டு' புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்தஅதாக கூறி லீனா மணிமேகலை மற்றும் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டுவிட்டர் நிறுவனம் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்ட நிலையில், தங்களை நீக்க கோரி டுவிட்டர் நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு குறித்து லீனா மணிமேகலை மற்றும் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்