தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிராக மேல்முறையீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடிகர் ஏழுமலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
x
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடிகர் ஏழுமலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23ம் தேதி கூறிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன், இந்த மேல்முறையீடு மனு விசாரித்து தீர்ப்பளிக்கப்படும் வரை நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணவும், தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நடிகர் ஏழுமலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்