வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
x
இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இந்தோனேசிய கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர் என்றும், இதேபோல் கடந்த 7ம் தேதி, செஷல்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி தமிழக மீனவர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்