நடிகர் செந்தில் புகார் | #ThanthiTv

நடிகர் செந்தில் புகார் | #ThanthiTv
x
பிரபல காமெடி நடிகர் செந்திலுக்கு சென்னை சாலிகிராமம் பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி வீடு உள்ளது. இந்த வீட்டை சகாயராஜ் என்பவருக்கு நடிகர் செந்தில் வாடகைக்கு விட்டதாகவும், ஆனால், சகாயராஜ் அதை தனது வீடு என கூறி பலருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் புகார் எழுந்த‌து. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் செந்தில் அந்த வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முயன்றுள்ளார். ஆனால், வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் செந்திலிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வாடகைதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனது வீட்டை மீட்டுத் தருமாறு சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்