"எம்ஜிஆர் பாட்டு ஏன் போடல?" - ஆல் இந்தியா ரேடியோவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரசிகர்

ஆல் இந்திய ரேடியாவில் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒலிபரப்பாததால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஒருவர் ரேடியோ நிலையத்திற்கு கடிதம் வாயிலாக மிரட்டியுள்ளார்.
x
ஆல் இந்திய ரேடியாவில் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒலிபரப்பாததால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஒருவர் ரேடியோ நிலையத்திற்கு கடிதம் வாயிலாக மிரட்டியுள்ளார். கோவை ஆல் இந்திய ரேடியோ நிலையத்திற்கு வந்த தபால் அட்டையில், "நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று ரஜினி பாடல்களை ஒலிபரப்பிய நிலையில், எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு மட்டும் ஏன் எம் ஜி ஆர் பாடலை ஒலிபரப்பவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், இதனைக் கண்டித்து ரேடியோ நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்போவதாக கடிதம் எழுதியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் ரேடியோ நிலையத்திற்கு பாதுகாப்பு அளித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்