போலீசார்- அதிமுக முன்னாள் எம்.பி. மோதல் விவகாரம் - முன்னாள் எம்.பி. அர்ஜூனன் மீது இரு பிரிவுகளில் வழக்கு

போலீசாருடன் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. அர்ஜூனன் மீது இரு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார்- அதிமுக முன்னாள் எம்.பி. மோதல் விவகாரம் - முன்னாள் எம்.பி. அர்ஜூனன் மீது  இரு பிரிவுகளில் வழக்கு
x
கடந்த ஞாயிறு இரவு, ஓமலூர் சுங்கச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த தர்மபுரி அதிமுக முன்னாள் எம்.பி. அர்ஜூனன் காரை மறித்தனர். திடீரென இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், போலீசார் அதிகாரி ஒருவர், அர்ஜூனனை தாக்கினார். இதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரியை எட்டி உதைக்கும் வகையில், அர்ஜூனன் காலை தூக்கினார். இதுகுறித்து எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், கருப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தகாத வார்த்தையால் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அர்ஜூனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்