பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் சட்டப் பிரிவினர் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டப் பிரிவினர் உயர்நீதிமன்றம் அருகில் மாட்டு வண்டியில் பயணம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டப் பிரிவினர் உயர்நீதிமன்றம் அருகில் மாட்டு வண்டியில் பயணம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக காங்கிரஸ் சட்டப்பிரிவு பொதுச் செயலாளர் என். அருள் பத்தைய்யா, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஆர்.சுதா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
Next Story