சேலம்- சென்னை ரயில்கள் கரூரில் வழி இயக்க ஜோதிமணி எம்.பி. மனு

கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
சேலம்- சென்னை ரயில்கள் கரூரில் வழி இயக்க ஜோதிமணி எம்.பி. மனு
x
கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுமேலாளர் ஜான் தாமஸ், சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, தனியார் வங்கி சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்த ஜான் தாமஸ், பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போது, கரூரில் இருந்து சென்னைக்கு புதிதாக பகல் நேரத்தில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்கள் அனைத்தையும் கரூர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜோதிமணி எம்.பி. மனு அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்