குரூப்-4 முறைகேடு புகார் எதிரொலி - குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறை

குரூப்-1 தேர்வு எழுத வெளிமாவட்டத்தை தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதற்கான விளக்கத்தை வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
குரூப்-4 முறைகேடு புகார் எதிரொலி - குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறை
x
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் சிக்கியவர்கள், சொந்த மாவட்டத்தை தவிர்த்து, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் தேர்வு எழுதியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதில், விண்ணப்பிக்கும் போது புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொந்த மாவட்டத்தை விடுத்து வெளி மாவட்டங்களை தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள், அதற்கான உரிய காரணத்தை விளக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்