பட்டறையில் வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் திருட்டு - விவசாயி வேதனை
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்குணம் கிராமத்தில் சக்திவேல் என்பவரது வயலில் உள்ள பட்டறையில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி சென்றுள்ளனர். மதியம் வயலுக்கு வந்த சக்திவேல் வெங்காயம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
Next Story