கனமழை எதிரொலி : தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை காரணமாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி : தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
கனமழை காரணமாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை மற்றும் நெல்லை செல்லும் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால்,  சென்னை மற்றும் கோவையில் இருந்து சென்ற ரயில்கள் மேலூர்  ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்