ஆற்றில் கல்லூரி மாணவியிடம் அத்து மீற முயன்ற இளைஞர்கள் : தடுக்க முயன்ற காதலனை ஆற்றில் வீசிய கும்பல்

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மடக்கிய கும்பல், காதலனை ஆற்றில் தூக்கி வீசி விட்டு காதலியிடம் அத்துமீற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்றில் கல்லூரி மாணவியிடம் அத்து மீற முயன்ற இளைஞர்கள் : தடுக்க முயன்ற காதலனை ஆற்றில் வீசிய கும்பல்
x
திருச்சி மாவட்டம் சமயபுரம் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் அமர்ந்து கல்லூரியில் படிக்கும் காதல் ஜோடி ஒன்று தனிமையில் பேசிகொண்டிருந்த‌னர்.  இதனை பார்த்த அங்குள்ள  5 இளைஞர்கள், கல்லூரி மாணவியிடம் அத்துமீற முயன்றனர். தடுக்க முயன்ற காதலன் ஜீவித்தை தாக்கிய இந்த கும்பல், கொள்ளிடம் ஆற்றின் ஆழமான பகுதியில் தூக்கி வீசி விட்டு தப்பி ஓடியது. இளைஞர்களிடம் இருந்து தப்பி பிழைத்த மாணவி, கொள்ளிடம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி தஞ்சம் அடைந்தார். மாணவி அளித்த புகாரின் பேரில், தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மாணவர் ஜீவித்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்