"மாலை 6 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
மாலை 6 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் வரும் நாளை மறுநாள் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைவதால் வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார். பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  நாங்குநேரியில் பண பட்டுவாடா புகார் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்