இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
x
இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 13 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் இயக்கங்கள், கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம் என்றும், அனைவரும் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்