"போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்" - நடராஜன், தொமுச பொருளாளர்

அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
போக்குவரத்து ஊ​ழியர்களின் போராட்டம் தொடர்பாக, சென்னை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கணேசன் தலைமையிலான அதிகாரிகளுடன், தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, சம்பள பிரச்சினை சரிசெய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்தார். பேச்சுவார்த்தைக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்