கொடைக்கானல் வனப்பகுதியில் திடீர் தீ விபத்து

கொடைக்கானல் மேல் மலைக்கு செல்லும் சாலையில் பூம்பாறை என்ற கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொடைக்கானல் வனப்பகுதியில் திடீர் தீ விபத்து
x
கொடைக்கானல் மேல் மலைக்கு செல்லும் சாலையில் பூம்பாறை என்ற கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மரங்கள் கருகியதுடன், மின்கம்பங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு, இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும் என்று, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்